ஞாயிறு, 25 அக்டோபர், 2020

இன்னுமொன்று 💙💚💛💜

நினைவுகளால் மட்டும் தனித்திருந்து

உன்னைவிட்டு நீங்கிப்பின் பிரிந்திருந்து

வாழப்பழகிக்கொண்டிருந்த என்னை,

இப்போது விடியவிடிய விழித்திருந்து 

எழுதும்படி செய்துவிட்டாயடி நின்னை.


எப்போதும்போலவே இம்முறையும் நீயே,

எனையெரித்திடும் அணைக்கின்ற தீயே;

தகிக்கின்ற என் பேனாவின் மையிலிருந்து,

தடுக்கின்ற தடையெதுவும் இல்லாதிருந்து,

திகைக்கின்ற விதமாய் வார்த்தைகளாகி,

திடுக்கிட கவிதைவடிவமாகி முன்நின்றாய்.!