புதன், 13 ஏப்ரல், 2022

அனைவருக்குமானவரானவரே

அனைவருக்கும் ஆனவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பாடல் என் வரிகளில்,

செல்கிறீர் நீண்ட தூரம் தோள்களில் தாங்கா பாரம் வழியெங்கும் சிந்திய இரத்தத்தின் ஈரம் ஆனீர் எங்களுக்காய் மா கோரம் வேண்டாமென்றீர் அனைத்து அதிகாரமே ஈந்தளித்தீர் உம்மையே ஆகாரமாய் மாலைமங்கிய அந்நேரம் சூழ்ந்தது அந்தகாரம் வேதவாக்கியம் நிறைவேற ஆனீர் ஆதாரம் உயிர்த்தெழுந்தார் தடைகடந்தார் பாதாளத்தின் வாசல்களை உடைத்தெறிந்தார் ஜெயமடைந்தார் கனம்சிறந்தார் அவரே எவருமில்லை அவருக்கு நிகரே அனைவருக்குமானவர் ஆனாரே...!