ஞாயிறு, 27 மார்ச், 2022

முழுமதியாய் வந்த திருமதி

 யாரென்றறியாதிருந்தபோதிலே 

முன்பே நான் எழுதிவைத்திருந்த

எல்லா காதல் கவிதைகளுக்குமே;

அன்பே, நீயே நிரந்தரமாயிப்போது 

முகவரியென்றாகிப்போனாயடி,

இனியெழுதப்போகும் கவிகளுக்கும் 

முதல்வரிகளுமாகிப்போனாயடி நீ.!