ஞாயிறு, 10 அக்டோபர், 2021

நியாயமான கோபம்

பெருந்திரள் ஜனக்கூட்டத்தை
காண்கிறபொழுதெல்லாமே
ஆத்திரமும் பெருங்கோபமும்
அடக்கமுடியாமல் வருகிறது,

அறிவில்லாமையினால்தானே
சங்காரமாகிறார்களேயென்று
நன்றாகத் தெரிந்திருந்துங்கூட
உணர்வில்லாத மனிதர்களாய்,

இன்னும் தனக்காகமட்டுமாய்
வேண்டி வாழ்ந்துக்கொண்டும்
பணம் பதவிக்காக சண்டையும்
அரசியலும் பண்ணிக்கொண்டு,

கொஞ்சமுங்கூட சிந்தையின்றி
ஆத்துமபாரம் சிறிதுமின்றியே
தான் ஆயத்தப்படவுமல்லாமல்
பிறரையும் ஆயத்தப்படுத்தாமல், 

பரலோகில் தங்களுக்கோரிடம்
உண்டென்றெண்ணி பொய்யாய்
பெயருக்கு கிறிஸ்தவர்களாய்
வாழும் பெயர்க்கிறிஸ்தோர்மீது.!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக