வெள்ளி, 23 நவம்பர், 2018

என் கிறிஸ்து

ஏதுமில்லாமல் இருந்தேன் நான்,
யாதுமாகி வந்தீர் எனக்காய்;

ஒருபோதும் விலகாது நின்றீரே,
எதிலேயும் விழுகாது காத்தீரே;

உம்மையல்லாமல் ஒருபோதும் என்னாலுமே,
ஒன்றுஞ்செய்ய இயலாதுதான் எந்நாளுமே;

என் பாவங்கள்யாவும் நீங்கத்தானே,
பலியானீரே எனக்காக நீங்க தானே;

எனக்காக சிலுவையில் நிர்வாணியானிரே,
பாவத்தைப்போக்கும் நிவாரணியுமானிரே.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக