சனி, 27 அக்டோபர், 2018

நினைவணிதல்

முதன்முதலில் உன்னை பார்த்தபோது
நானணிந்திருந்த ஆடையை
திரும்ப எப்போதெல்லாம்
அணிகின்றேனோ
என்னையுமறியாமல்
உன் நினைவுகளையும்
சேர்த்தே அணிந்து கொள்கிறேன்நான்.!

முன்குறிப்பு:
இக்கவிதை உன்னைப்பார்த்த நாளன்று(27.10.2015) அணிந்திருந்த உடையை இன்று திரும்பவும் நானணிய நேரிட்டதால் இப்போது தோன்றியது மேலும் நாட்காட்டியில் இன்று தேதியை பார்த்தபோதுதான் ஞாபகம் வந்தது சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பாக இன்றையநாளில்தான் நான் உன்னை பார்த்தேன்.!

நடுகுறிப்பு:
அந்த 'உன்னை' என்பது யாராக இருக்குமென்று யாரும் ரொம்ப யோசிக்கவேண்டாம், ஏனென்றால் அது எனக்கேத்தெரியாது மேலும் இது அந்த 'உன்னை'க்கே தெரியாது.

பின்குறிப்பு:
உடனே அப்போ மூன்று வருடங்களாக ஒரே ஆடையைத்தான் போட்டுட்டு இருக்கியான்னு யாராச்சும் கேட்டிங்கனா பாத்துக்கோங்க.!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக