செவ்வாய், 16 ஜூன், 2020

மிஸ்டு கால்

கொடுத்த கடனை திரும்பக் கேட்கத்தான்
கால் பண்ணுவதாய் வாங்கியவன் தன்னை
தவறாக நினைத்துக்கொள்வானோ
என்று கொடுத்தவனும்,

திரும்பக் கடன் வேண்டுமென கேட்கத்தான்
கால் பண்ணுவதாய் கொடுத்தவன் தன்னை
தவறாக நினைத்துக்கொள்வானோ
என்று வாங்கியவனும்

நினைத்துக்கொள்வார்களோ என்னவோ
சகஜமாகக்கூட பேசிக்கொள்ளமுடியாதபடி
பலரது கால்கள் அழைக்கப்படாமலேயே
மிஸ்டு கால்களாகிக் கிடக்கின்றன.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக