வெள்ளி, 10 ஜூலை, 2020

நிரப்பப்படாததா(ல்/ள்)

வெற்றுத்தாள்களாய் இருந்த நாங்களிருவரும்,
சரியான பதில்களாய் நினைத்துக்கொண்டு
கேள்விகளையே பாராமல்  எழுதமுயன்றோம்,
எனக்கான பதிலாய் நான் அவளையும் 
அவளுக்கான பதிலாய் நானுமென்று.

பின்னர்தான் தெளிவடைந்தோம் உணர்ந்து,
வேற்றுத்தாள்களாய் மாறிப்போனதையறிந்து
எழுத எத்தனிக்கும்போதே எதிர்ப்பைப்புரிந்து,
விடையெழுதாமலே விடைபெற்றுக்கொண்டு
அவரவர்தாள்களை திரும்பப்பெற்றுக்கொண்டு.

எங்களதுதாள்களில் கையெழுத்து இட்டுவிட்டு,
வெறுந்தாள்களாய் கர்த்தரிடம் சமர்ப்பித்துவிட்டு
கேள்விக்கேட்டதற்கு பதிலாக, காத்திருந்துப்பின்
கேள்விக்கேற்ற பதிலாக சரியான விடையைப்பெற
திருத்துபவரிடமே திருந்திப்போய் நிற்கின்றோம்.

திரும்பப்போய் அவரிடம் நாங்கள் நின்றாலும்,
கேள்விக்கு பதில்களாக இல்லை என்றாலும்,
எழுதியுள்ளதெல்லாம் எங்கு எப்படி சென்றாலும்,
கடைசி மூச்சுவரை எங்களை வென்றாளும்
கிறிஸ்துவிடமே ஒப்படைத்திருக்கிறோம் எங்களை.!


2 கருத்துகள்: