வெள்ளி, 13 ஜனவரி, 2017

திருமண கவிதைகள்

திருமண வாழ்த்துக்கவிதைகள்:-

1.)
மனம் ஒத்து மணம் புரியும் இருவரும்,
இன்றுபோல் என்றுமே மனமாறாமல்
இருக்க மனமார வாழ்த்துகிறோம்.!


2.)
பெண்:
இன்றிலிருந்து உன்னவளாகும் நானும்,
நீயெனக்கு அணிவிக்கும் மங்கல நாணும்,
என்னோடு சேர்ந்தே மகிழ்ச்சியில் நாணும்.!
ஆண்:
இன்றிலிருந்து என்னவளாகும் நீயும்,
மனதார வாழ்த்துவார்கள் என் தாயும்,
நீயேற்றப்போகும் தீபத்தின் தீயும்,
வெளிச்சத்தில் இருளும் தேயும்.!



3.)
வெவ்வேறு மாம்சமான நீங்களிருவரும்,
இனி ஒரே அம்சமான பாண்டமாயிருங்கள்;
காதலாகி கசிந்துருகிய நீங்கள் இன்று,
மணமாகி இசைந்து வாழுங்கள் என்றும்;
மனதை பரிமாறிக்கொண்டீர்கள் நீங்கள் அன்றே,
மாலைமாற்றி பயணத்தை தொடங்குங்கள் நன்றே;
மணவாளனான _______ம் & மணவாளியான _______ம்,
வாழ்க பல்லாண்டு, வளர்க பலகோடிநூறாண்டு.!



4.)
ஒருமனப்பட்டு
இரு உள்ளங்கள்
மூன்றுமுடிச்சிட்டு,
நான்குபேர் வாழ்த்தி
ஐம்பூதங்கள் சாட்சியாய்
அறுசுவையோடு
ஏழுராகங்களிசைத்து,
எட்டுத்திக்கும் சென்று
நவரத்தினங்கள் போல்
பத்தும்படியல்ல, ஒருவரையொருவர்
பற்றும்படி வாழ மனதார வாழ்த்துகிறோம்.!



5.)
நாமாகும் நாள் இது:-

எனக்கானவளாக நீயாகும் நாளிது,
உனக்கானவனாக நானாகும் நாளிது,
நமக்கானவராக நாமேயாகும் நாளிது;
ஆம், நமக்கான நாளிது,
நீயும் நானும் நாமாகும் நாள் இது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக