திங்கள், 9 ஜனவரி, 2017

எனது கவிதை

எனக்கானவளுக்கான தேடலை நிறுத்திவிட்டேன்
உன்னைப்பார்த்த அந்த முதல் நொடியிலேயே,
என் கற்பனை உருவாக்கத்திற்கு உருவம்தந்தேன்
அழகிற்கே உருவகமாயிருக்கும் உன்னைக்கண்டு.!

என் கனவு யாவற்றையும் உண்மையாக்கினாய்
உன்னழகால் வென்றென்னை நீயே மயக்கினாய்,
உன்னன்பால் என் கவலைகளை மாயமாக்கினாய்
முடிவில் என்னை முழுவதும் உன் மயமாக்கினாய்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக